Ownstory Tamil
Age: 62 years old | Death Place: United Kingdom | Birth place: Nallur
யாழ். நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த உதயகுமார் பரிபூர்ணானந்தா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி
அப்பா...
மூன்று ஆண்டுகள் கடந்தும்,
உங்கள் நிழல் எங்களை விட்டு பிரியவில்லை.
ஒவ்வொரு மூச்சிலும் உங்களின் பாசம்,
ஒவ்வொரு நாளிலும் உங்களின் நினைவின் வாசம்.
வாழ்க்கைப் பாதை காட்டிய வழிகாட்டி நீர்கள்,
வலிமை தந்தும், நம்பிக்கை வளர்த்தும் போற்றிய நீர்கள்.
இன்று நாங்கள் எடுக்கும் அடிகளெல்லாம்,
உங்கள் ஆசீர்வாதத்தின் சின்னமே தான்.
காலம் சென்றாலும் பாசம் சுருங்கவில்லை,
உங்கள் சிரிப்பு இதயத்தில் அழியவில்லை.
தந்தை என்ற அந்தப் பெருமைச் சொல்,
நித்தம் எம்முள் உங்களை உயிரோடு வாழவைக்கிறது.
அப்பா...
நீங்கள் எம்முள் ஒளியாய் நிலைத்திருக்க,
எம் வாழ்வின் வரைவு என்றும் உங்களாலே நிறைவாகிறது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!