Ownstory Tamil
Death Place: Nallur | Birth place: Allappidy
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் இராசாவின் தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறு ஆண்டுகள் கடந்தும் அப்பா,
உங்கள் நினைவுகள் அழியவில்லை எப்போதும்.
அன்பின் ஒளியாக வாழ்வை வழிநடத்திய,
அருமை தந்தையே நீங்கள் எம் இதயத்தின் தெய்வம்.
உழைப்பின் சுவடுகள் பாறை போல நிற்க,
உங்கள் உபதேசம் எங்கள் வாழ்வைத் தாங்க.
சிரிப்பு நிறைந்த முகம் மறைந்த போதிலும்,
உங்கள் சுவாசம் இன்னும் எம்முள் வாழ்கின்றதே.
கஷ்டம் வந்த போதும் தாங்கிய தோள்,
கருணை கொடுத்தது உங்கள் இனிய சொல்.
பாசமெனும் சூரியன் நீயன்றி யாரோ?
பாரமாய் நிற்கும் எங்கள் உயிரின் ஆதாரமோ!
ஆறு ஆண்டுகள் நினைவில் மலர்ந்திட,
ஆசிகள் உங்கள் எங்களை காக்கின்றன.
என்றும் எம் உள்ளத்தில் நிலைத்திடும் நீங்கள்,
எங்கள் வாழ்வின் ஒளியாக ஜீவிக்கின்றாய் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!